எண்ணங்களைக் கொள்ளைகொள்ளும்
வண்ணங்களில் ஒளிர்கிறாய்!
மலர்கள் தோறும் சென்றமர்ந்து
மதுவருந்தி மகிழ்கிறாய்!
பட்டாம் பூச்சி என்ற பெயரில்
பறந்து எங்கும் திரிகின்றாய்!
பார்ப்பதற்கோ எங்களுக்குப் பறக்கும் பூவாய் தெரிகின்றாய்!
உன்னை உற்றுப் பார்க்கிறேன்
என்னை நானேக்கேட்கிறேன்
முட்டையெனப் பிறப்பெடுத்து
பின்னர் புழுவாய் மாறினாய்
முட்கள் போல முடிகள்
கொண்ட லார்வா என்றே மாறினாய்!
தன்னைச்சுற்றிக் கூடுகட்டி
தவநிலையில் இறங்கினாய்!
பியூப்பா என்றக் கூட்டுப் புழுவாய்
பாப்பாப் போல உறங்கினாய்!
சின்னதொரு கூட்டுக்குள்ளே
வண்ணம் யாரு வரைந்ததோ!
என்னவொரு அழகுடனே எழிலுருவம் அடைந்தாயே!
கண்ணைக்கவரும் வண்ணமாகக்
காற்றில் எங்கும் மிதந்தாயே!
வண்ணத்துப் பூச்சியுன்னை வாய்பிளந்துப் பார்க்கிறேன்!
வண்ணங்களை எனக்கு நீயும் வழங்கிடவேக் கேட்கிறேன் கேட்ககிறே!
No comments:
Post a Comment