மகாத்மா...காந்தியடிகள் மனிதப்பிறவியில் உயர்ந்த பிறவியாக உலகத்தில் மதிக்கப்பட்டதால் அவரை முதன் முதலாக ரவீந்தரநாத் தாகூர் “ மகாத்மா” என்று அழைத்தார் ....பகட்டு,ஆடம்பரம் ,எதுவுமின்றிஆயுத பலமின்றி ஆன்ம பலத்தாலும் தாய்நாட்டு மக்கள் பலத்தாலும் ஆங்கில அரசைத்திரும்பிப் பார்க்க வைத்து திணறடித்த வர் காந்தியடிகள் .அவருடைய கடைசி சொட்டு இரத்தமும் இந்தியாவுக்காகவே சிந்தப்பட்டது . ................
தன்னைக்கொன்றவருக்குக்கூட தீங்கு செய்ய வேண்டாம் என்று கூறியவர் மகாத்மா அவர்கள்.அவருடைய 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி காந்தி அடிகளின் வரலாற்று புகைப்படப் படங்கள், உலக நாடுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் கண்காட்சி ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி , இடைமலைப்பட்டிப்புதூரில்...💐💐💐💐மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டு பயன் பெற்றனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் திரு.பெ.விஜயகுமார் அவர்களால் அஞ்சல் தலைகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டது. ..................உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியைக்கண்டு. மகிழ்ந்தனர் ...
நன்றி..திரு விஜயகுமார்
Monday, September 03, 2018
மகாத்மா காந்தி அடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment