https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Thursday, June 08, 2017

மொட்டுகளை மலர்களால் மலர - கல்விப்பணி

மொட்டுகளை மலர்களால் மலர வைக்கும் கதிரக்கடவுளின் வழித்தோன்றல்கள் மழலைகளை மாணவர்களாய். மனிதர்களாய் மாற்றும் உபாதயம் புரிந்தவர்கள் கல்விக்கடலில் அரிய முத்துக்களை. அகழ்ந்தெடுக்க அறிந்தவர்கள் கற்றதை உற்றபடி உற்றவர்க்குக். கற்பித்து. ஏற்றம் பெற ஏணியாகி நிற்பவர்கள் நாங்கள் அறிவுத்திறனை வளர்க்கும் அரும்பணி ஆற்றியுள்ளார் சீரிய நோக்குடைய ஆசிரியர்கள் இப்பணியின் புனித த்தை இதயத்தில் நிலை நிறுத்தி ஈடிலாப் பணி செய்வோம். நரேந்திர்ர்களை விவேகானந்தர்களாய். உருவாக்கும் பணி செய்வோம்............

ஐந்திலே ஏற்றிய தீபம் அணையா ஒளி விளக்காய் ......
ஐம்பதிலும் ஒளிர்ந்து விடும் வண்ணமாய்ப் பணி செய்வோம் .......


கல்விப்பணி ...... மறு மலர்ச்சியில் இன்று வெற்றி பெற்றிடவே பற்றுடனே பணி செய்வோம்.............


 

 

Wednesday, June 07, 2017

அனைவரின் வாழ்த்துகளோடு...........புதியக்கல்வியாண்டு.

புதியக்கல்வியாண்டு. புவியில் நமக்கு புதிதாய்ஒன்று. வழங்கப்படுகிறது! இதயம்முழுக்க நன்றி உணர்வு இனிதாய் நிறையட்டும்! உதயம்தொடங்கி ஒவ்வொரு நொடியும் உழைப்போம்! உயர்வுகள் நம்மை சிகரத்தில் நிறுத்தட்டும் ...,,,,,........ ......

உழைக்கும் மனம்கொண்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய. கல்வியாண்டுப்பிற
க்கிறது தொண்டு மனம் கொண்டு வாழ ......

இன்று அல்ல என்றுமே புத்தாண்டு பிறப்பதுவே! மழலைகளுக்காகவே வாழ்பவர் தமக்கு. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு நொடியும். மகிழ்வான புது நொடியே! புறப்படுகிறேன் உங்கள் ...............

அனைவரின் வாழ்த்துகளோடு............

பூக்கள் அங்கே எனக்காக காத்திக்கிடக்கின்றன ....................

.

"..புலியைக்காப்போம் புவியைக்காப்போம் "

இயற்கையைக்காப்போம் ............"..புலியைக்காப்போம் புவியைக்காப்போம் ". என்கிற கோஷம் எங்குப்பார்த்தாலும ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது .இதற்கு காரணம் என்ன? காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்த தால். மனிதனுக்கு ஆதார சுருதியாக விளங்கும்இயற்கைச்செல்வங்கள் அழிந்துக்கொண்டேப்போகின்றன....ஒரு வருடத்தில் ஒரு புலிக்கு எத்தனை மான்கள் தேவை தெரியுமா? 40 மான்கள் தேவை.காட்டில் மான்கள்இல்லை என்றால் புலி என்ன செய்யும் .காட்டு எல்லையோர கிராமங்களில் இருக்கும் ஆடு , மாடுகளை அடித்துச்சாப்பிட புலி ஊருக்குள் வந்து விடுகிறது .எனவே காடுகள் நல்ல அடர்த்தியாகவும் , தேவையான பரப்பளவு கொண்டவையாகவும் , நீர்மற்றும் தாவர ஆதாரங்களோடும் இருந்தால்மட்டுமே வெவ்வேறு உயினங்கள் மனிதனோடு மோதல் இல்லாமல் சுதந்திரமாகவும் , ஆரோக்கியமாகவும் வாழமுடியும் .புலிக்குத்தேவை மான் .மானுக்குத்தேவை புல் .
புல்லுக்குத்தேவை நீர் . மனிதனுக்குத்தேவை தாவரங்கள்.இந்த இயற்கையின் சுழற்சி சரியாக இருந்தால் தான்தாவரங்களும் இருக்கும் . விலங்குகளும் இருக்கும் . மனிதனும் வாழ்வான் .அதனால் தான் புலியைக்காப்போம் . புவியைக்காப்போம் என்று சொல்லுகிறோம்..........
காட்டை அழித்து வீட்டைக்கட்டாமல் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் ........


Monday, June 05, 2017

THE NEW INDIAN EXPRESS செய்தித்தாளில் - இடமலைப்பட்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

தீவிர மாணவர் சேர்க்கைப்பேரணி .......

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இடமலைப்பட்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற மாணவர்கள் சேர்க்கைப்பேரணியை பற்றிய செய்தி இன்றைய  THE NEW INDIAN EXPRESS   செய்தித்தாளில் ...............


ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ......

ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ......


 திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில்  துவங்கப்பட்டது. 


சேர்க்கைப்பேரணியை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்  அவர்கள் கொடி அசைத்து  தொடங்கிவைத்தார்

மணிகண்டம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்,கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு அவர்கள் , முன்னாள் கிராம கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும் முன்னிலை வகித்தனர். பேரணிக்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார் .பேரணியில் இருபால் ஆசிரியர்கள் ,இருபால் ஆசிரியப்பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்,சினேகம் அறக்கட்டளை பால்குணா அவர்கள் , சிறப்பாசிரியர் கள் , பெற்றோர்கள்  , மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.........


பேரணியில் மாணவர்கள் பள்ளியின் சிறப்புகுறித்த பதாகைகளை ஏந்தியும் , அரசுப்பள்ளியின் பெருமைகளை ஒலிப்பெருக்கி மூலம் காளியம்மன்கோவில் தெருவில் இருந்து , மெயின்ரோடு , கொல்லாங்குளம், எம்ஜிஆர் நகர் , அரசுக்காலணி , கல்லுப்பட்டறைத்தெரு   நாயக்கர் தெரு வழியாக சென்று வந்தனர்.

பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .

திவிர மாணவர் சேர்க்கை பேரணி...

ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ....

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில்  துவங்கப்பட்டது.
பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .