https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Monday, June 05, 2017

ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ......

ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ......


 திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில்  துவங்கப்பட்டது. 


சேர்க்கைப்பேரணியை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்  அவர்கள் கொடி அசைத்து  தொடங்கிவைத்தார்

மணிகண்டம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்,கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு அவர்கள் , முன்னாள் கிராம கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும் முன்னிலை வகித்தனர். பேரணிக்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார் .பேரணியில் இருபால் ஆசிரியர்கள் ,இருபால் ஆசிரியப்பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்,சினேகம் அறக்கட்டளை பால்குணா அவர்கள் , சிறப்பாசிரியர் கள் , பெற்றோர்கள்  , மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.........


பேரணியில் மாணவர்கள் பள்ளியின் சிறப்புகுறித்த பதாகைகளை ஏந்தியும் , அரசுப்பள்ளியின் பெருமைகளை ஒலிப்பெருக்கி மூலம் காளியம்மன்கோவில் தெருவில் இருந்து , மெயின்ரோடு , கொல்லாங்குளம், எம்ஜிஆர் நகர் , அரசுக்காலணி , கல்லுப்பட்டறைத்தெரு   நாயக்கர் தெரு வழியாக சென்று வந்தனர்.

பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .

No comments:

Post a Comment