https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, December 23, 2018

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

💐கிறிஸ்துமஸ்                                                  கொண்டாட்டம்💐
“நான்பசியாய் இருந்தேன்  எனக்கு உண்ணக் கொடுத்தாய்.
நான் தாகமாய் இருந்தேன்  எனக்கு குடிக்க கொடுத்தீர்கள்
நான் ஆடையற்று  இருந்தேன்  என்னை போர்த்தினீர்கள் .
நான் தனிமையில் இருந்தேன்  எனக்கு ஆதரவளித்தீர்கள் “.
என்ற இறைமகன்  இயேசு கிறிஸ்துவின் இனிய மொழிகளை இதயத்தில் ஏற்று இளையோர் உள்ளங்களில்  இரக்கம் பெருகவும், தருவதே இன்பம் என்ற தத்துவத்தை  மாணவர்கள் மனதில்  விதைத்து  இல்லார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்ற முதுமொழியை மாணவர்கள்  மனதில்  பதிக்கும்  வண்ணமாய் சமுதாயத்தில்  புறக்கணிக்கப்பட்ட  ஏழைகள் ஆதரவற்றோர், முதியோர்  மனநலம் குன்றியோர் ஆகியோரிடத்தில்  தங்கள் மகிழ்ச்சியை பகிர்தலே உண்மையான கிறிஸ்துமஸ் என்பதை மாணவர்களுக்கு  உணர்த்தும் வகையில்  அமைந்திருந்தது.....எங்கள்  பள்ளி கிறஸ்துமஸ் விழா ...இந்த ஆண்டின் கடைசி வேளை நாளான நேற்று ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியில் இருந்த  குழந்தைகளை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து  மேலும் மகிழ்ச்சியில்  மூழ்கடித்தார் கன்மலை எடிசன் அவர்கள் ... நன்றி கன்மலை அறக்கட்டளை  எடிசன் ......

No comments:

Post a Comment