அன்பு மகனே..
#தென்றல்
நீ பேசும் போது தென்றல் தோற்கும்.... தென்றலைக்காட்டிலும் உன்னுடைய சொற்கள் இதமாய் இருக்கும்......
#பணிவு
உன்னிடம் பாடம் கேட்கும்........
#கனிவு
உன்னுடைய செயல்களோடு கைகொடுக்கும்...
# மனித நேயம்
உன்னிடத்தில் உன் உருவத்தில் உருக்கொண்டிருக்கும்....
# மானுடம்
உன் முகவரியாய் முகிழ்த்துக்கொண்டேயிருக்கும்...
#நட்பு
தொண்டும் தோழமையும் உன் நட்பு வட்டம்....
#உதவி
முகம் மறைத்துக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில் முணுமுணுக்காமல் முன் வந்து நிற்கும் குணம்...
#பக்தி
தாத்தா,பாட்டி
தாய்,தந்தையை வணங்கி என் தெய்வம் நீங்கள் என்று சொல்லும் அழகு....
#அறிவு
கலைமகள் உன்னிடத்தில் குடி இருப்பதால் எதிலும் முதலிடம்......
இன்று பிறந்த நாள் காணும் ....25/11/2018
பா.நவின் கிஷோர் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்..
Tuesday, December 04, 2018
மகனின் பிறந்த நாள் விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment