இடமலைப்பட்டி புதூர் பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறேன்
திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வரும் வெள்ளிக்கிழமை (22-03-2019), பள்ளி ஆண்டு விழா, பள்ளிச் சீர் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.
இப்பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட, சென்னையிலிருந்து வருகிறேன்.
இவ்விழாவிற்கு நான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த Latha Balaji ஆசிரியைக்கு எனது பேரன்பும் வாழ்த்துகளும்... அப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு எனது நன்றிகளும் உரித்ததாகட்டும்.
இயன்றோர் நிகழ்விற்கு வருக... சந்திக்கலாம். பிற்பகல் 2:30 மணியிலிருந்து இரவு வரை பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன.
வாருங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களோடு இணைந்து கொண்டாடுவோம்... சந்தித்து அளவளாவுவோம்.
No comments:
Post a Comment