கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க..102.1 வானவில் பண்பலை... காற்றில் மிதக்கும் ஒலியாக
கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே
களிக்க விருந்தென வந்திடும்!
வந்திடும் நிகழ்ச்சி சுவையாக
வையம் முழுக்க உலவிடவே
வண்ண சித்திரம் ஒலித்திடும் !
ஒலித்திடும் வானொலி செய்தியினில்
உலக நிலவரம் உள்ளடக்கி
ஊரும் பேரும் தந்திடும்!
தந்திடும் தகவல் நலமென்றே
தவறாது மக்கள் கேட்டிடும்
தன்னிக ரில்லா ஊடகம்!
ஊடக வரிசையில் வானொலிதான்
உயர்தே நிற்கும் எப்போதும்
உயர்வான் கற்று பாமரன்ய்ம்!
பாமரனும் பயிலும் பள்ளியென
பாதைப் போட்ட வானொலியே
படிக்க சொல்லும் வீடுதோறும்!
வீடுதோறும் ஒலி வீசும்
வீணே நேரம் கழிக்காது
வேலை செய்தே கேட்டிடு !
கேட்டிடு என்றும் வானொலியை
கேளிக்கை ஆபாசம் ஒளியினிலே
ஒலித்திட கேட்டிடு வானொலியை....நேற்றைய விடுமுறையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து....
குளு குளு அறையில் மகிழ்வுடன்.....18 பெண் குழந்தைகளுடன் மகிழ்வாய் " மழலையர் நேரம்,"நிகழ்வில் கலந்த அருமையான தருணம்....Panchayat union primary school,Edamalaipattipudur Trichy-12
No comments:
Post a Comment