அக்டோபர் 2 ல் பிறந்தவரே.
போர் பந்தரில், தவழ்ந்தவரே..
போர்க்குணம் ஒழித்த, புண்ணியரே.
கதரை ராட்டையில், நெய்திட்டவரே
கள்ளுண்ணாமையை, முழங்கிட்டவரே தண்டியாத்திரை செய்தவரே.
தன்னலம் இன்றி வாழ்ந்தவரே. அஹிம்சை வழியில், நடந்தாயே.
அண்ணல் காந்தி ஆனாயே.
சத்யாகிரஹத்தால் சுதந்திரத்தை, சாதித்துத் தந்த மகாத்மாவே.. ...........
பாசச் சிந்தையால் பவனி வந்த, தேசத்தந்தை மகாத்மாவே. பதிப்போம் உன் வழி
பாரினிலே ........
உள்ளத்தில் தூய்மை
செயலில் தூய்மை
பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளால் “ எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி” என்று கூற முடிந்தது .
மகாகவி அவர்கள்
வாழ்க ! நீ எம்மான் இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்ற
தா மோர்
பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க ! வாழ்க !என்றார். ...........
நம்மை வாழ்விக்க வந்த வித்தகர் தனது வாழ்க்கை வரலாறு மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார் ..............
Wednesday, October 17, 2018
காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment