Tuesday, August 15, 2017
மணிகண்டம் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது இதில் 16 நடுநிலைப்பள்ளிகள் கலந்துக்கொண்டன....... காலை பத்து மணிக்கு புனித அந்தோணியார் ஆர்.சி. மான்யத் துவக்கப்பள்ளி மாணவிகளின் Band முழக்கத்துடன் கல்லூரி முதல்வர் கொடி அசைத்து வைக்க, தொடக்கக்கல்வி அலுவலர் , கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் மாணவர்களை வரவேற்று விழாவைத்தொடங்கிவைத்தார்கள்.250 மாணவ / மாணவிகளும் 30 ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர் . இடைமலைப்பட்டிபுதூர் . பஞ்சப்பூர், சோமரசம் பேட்டை பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர் . 100, 200, 400,600,800மீ ஓட்டப்பந்தயமும் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் குண்டெறிதல் போட்டிகளும் நடைப்பெற்றன. நடைப்பெற்ற போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் நான்கு பரிசுகள் பெற்றனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment