Tuesday, August 15, 2017
நெஞ்சையல்லும் தஞ்சையில் நெகிழ்வான ஒரு நிகழ்வு தொன்மைதனைக் காக்கின்ற உண்மையானத் தொண்டர்கள் ஒருங்கிணைந்து நடத்திய ஒப்பற்றக் கண்காட்சி சங்ககாலம் முதலாக எங்க காலம் வரை அப்பப்பா நாணயங்கள் அணிவகுத்த அழகேத் தனி மும்முடிச் சோழர்களும் முத்தானப் பாண்டியரும் வில்லேந்திப் போர் செய்த வீரர்களாம் சேரர்களும் குறுநில மன்னர்களும் பெரு நிலக்கிழார்களும் கைத்தொட்டுப் பயன்படுத்திய காசுமுதல் பழம்பொருட்கள் காணக்கண்கோடி வேண்டும் மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சி நிறைவு நாளில் தேன்போன்ற மாணவரைத் தெரிவு செய்து பரிசளிக்க வா என்று எனையழைத்தார் வாய்ப்பதனைப் பயன்படுத்தி வழங்கி வந்தேன் பரிசுகளை இனிதான நிகழ்வதுவும் இதயத்திலே நிழலாடும் நன்றியோடு வாழ்த்துகிறேன் நாடுபோற்றும் பணி வாழ்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment