Friday, August 25, 2017
" பந்து ஒன்றை வீசிடுவோம் " பூமிக்கு மரத்தை பரிசாய் தந்திடுவோம்". விதைப்பந்து திருவிழா.................... ஏவுகனை நாயகன் *ஐயா அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம்* ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நமது *Shine TREEchy* அமைப்பினர் மண்ணுருண்டைகளின் உள்ளிருந்து மகப்பேறாகவிருக்கும் காடுகள் பசுமையான பாதைக்கு புதுத்தளம் அமைப்போம் என்பதை மையகருத்தாக கொண்டு *விதைப்பந்து திருவிழாவினை* விக்னேஷ் பள்ளி, உறையூரில் இன்று 29-07-17 காலை 8.30 மணிக்கு துவங்கினர் இந்த நிகழ்வில் காவேரி மெட்ரிக் பள்ளி மாணவிகளும் கலந்துக்கொண்டனர் .10000 விதைப்பந்துகளை 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தயாரித்தனர் . இதில். மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விதைகளை மண்ணில் மட்டும் அல்லாது மாணவ சமுதாயத்தின் மனதிலும் விதைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment