#விழிப்புணர்வு_பதிவு
வெளிநாடு செல்லும் நண்பர்கள் கவனத்திற்கு.......
என் நண்பர் ஒருவர் துபாய் சென்றார். அவருக்கு இங்கு நீங்கள் படித்த படிப்பிற்கு அதே வேலை வாங்கி தருவதாக சொல்லி ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சென்றதும் லேபர் வேலை கொடுத்துவிட்டனர் .காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை பளு அதிகம்,
அதை கேட்டதற்கு அந்த நிறுவனம் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது, உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளனர், நீ லேபர் வேலைக்காகதான் உன்னை அழைத்து வந்தேன், நீ ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளாய் உன்னாலும், அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி அந்த நபரை துன்புறுத்தி உள்ளது,
மன வேதனை அடைந்த அந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருந்தார், இதை அறிந்து தெய்வம் போன்று அங்கு வந்த அன்பு அண்ணன் ரவி சொக்கலிங்கம் அவர்கள் அந்த நிறுவனத்தின் முதலாளியை நேரில் சென்று பார்த்து விவரத்தை கேட்டு அறிந்தார். பின்னர் அவர்கள் கூறியது என்னிடம் அவர் லேபர் வேலை வருவதாக கையொப்பம் இட்ட ஒப்பந்தம் உள்ளது என்று கூறிஉள்ளனர்,
அடுத்து அண்ணன் ரவி அவர்கள் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி அந்த நபரை வேதனையில் இருந்தும் அந்த நிறுவனத்திடம் இருந்தும் மீட்டு அவரை தமிழகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்தார்..
அண்ணா ஒரு உதவி என்று சொன்ன உடனே ஒரு மாதகாலம் துபாயில் போராடி பல பிரச்சனைகளை சந்தித்து அந்த நபரை பத்திரமாக மீட்டு பெற்றோர் இடம் ஒப்படைத்த அண்ணன் Ravi Chokkalingam அவர்களுக்கு மனமார்ந்த கோடி நன்றிகள்..
இனியாவது வெளிநாடு செல்லும் நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும்,
அவர்கள் நீட்டும் அனைத்திலும் கையொப்பம் போடாதிர்கள்.
#குறிப்பாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் போது நன்றாக படித்து பார்த்து கையொப்பம் இடவும்...
No comments:
Post a Comment