அரசுப்பள்ளியின் காவலன் நீ....
ஆசிரியர்களின் அரும்பணியை பாராட்டுபவன் நீ...
இல்லை என்ற வார்த்தை அறியாதவன் நீ....
பள்ளிக்கு என்று கேட்டால்
அள்ளிக் கொடுத்திடும் அட்சய பாத்திரம் நீ...
சொல்லில் தேன் கலந்தே
தொடர்ந்து பேசிடும் களஞ்சியம் நீ...
பிள்ளைகள் என்று வந்தால்
பிரியமாய்ப் நடந்திடும் தாய் நீ.....
பிறந்தநாளில் பரிசனுப்ப
மறந்தும் இருந்ததில்லை நீ.....
சிறந்தவரைப் பாராட்ட சிறிதும் தயங்கியதில்லை நீ.....
எல்லையில்லா கருணையோடு
எந்நாளும் அறம் புரியும் தாய் நீ...... மாணவர்களை நேசிக்கும் ஆசான் நீ....
மாற்றங்களை யோசிக்கும் பொறியாளன் நீ...
.பக்தியின் பகலவன் நீ....
மழலையர் களை மகிழ்விக்கும் தந்தை நீ......
என் இன்ப துன்பங்களில்
பங்குபெறும் சகோதரன் நீ....
இன்றைக்கு உந்தன் பிறந்த நாள்.. பல்லாண்டு காலம் வாழ..வாழ்த்துவோம்.....
Saturday, November 17, 2018
பாராட்டுவிழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment